எதிர்காலம் என் கண்முன்னே விரிந்து
கிடக்கிறது;எங்கும் மகிழ்ச்சி,
எங்கும் ஆனந்தப் பேருவகை.இப்படிச்
சொல்லத்தான் ஆசை எனக்கும்;ஆனால்,
உண்ணும் சோறும் பருகும் நீரும்
பாழாய்க்கிடக்கிறதே?
விதைத்தவன் உறங்கலாம்,
விதைகள் உறங்காது என்றார்கள்.
டெல்டாவில் நிலைமையோ,
விதையும் செத்தது,விதைத்தவனும்
செத்தான்;அவன் சாகுபடி செய்ததனால்
சாகும்படி ஆனது;
நேர்மறை எண்ணம் தேவைதான்!
எதிர்மறையாய் இயங்கும் அரசுகளால்
(கர்நாடக ,மத்திய மாநில )
நினைப்பெல்லாம் நிலைகுலைந்து போனதே ?
கேள்விக்குறியான விவசாயியின் எதிகாலத்தின்
கூன் நிமிர்த்தி,ஆச்சர்யக்குறியாக்க
ஆவன செய்ய, படித்தோரெல்லாம்
களமிறங்குவோம்;அல்லல்படுவோரை
ஆற்றுப்படுத்துவோம்.அதுவே,
நாம்கற்றதனாலாய பயன்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.