எதிர்காலம் : கே.நடராஜன்

Updated on
1 min read

நெருநெல் உளனொருவன் இன்றில்லை என்னும் 
பெருமை  படைத்து இவ்வுலகு ...சொன்னான் 

வள்ளுவன் !  வள்ளுவன் வாக்கையும் வென்று 
நான் காண்பேன் கதிரவனை நாளை காலை 
என்னும்  நம்பிக்கை நம் எதிர்கால கனவுக்கு 

நாம் போடும் அடித்தளம் ...இன்று இல்லாவிட்டால் 
என்ன ..."நாளை  நமதே" என்னும் நம்  நம்பிக்கை 
மாற்றும் நம் எதிர்காலத்தை ஒரு வசந்த காலமாக !

புரியாத புதிர் அல்ல நம் எதிர்காலம் ...ராசி 
பலன் சொல்வதும்  அல்ல நம் எதிர்காலம் !
நம் எதிர்காலம் நம் கையில்தான் ..கை ரேகையில் அல்ல !

"நாளை நமதே " என்னும் நம்பிக்கை  நனவாக 
தேவை இன்று நம் கடின உழைப்பு ...
உழைப்பு ...விடா முயற்சி ..தன்னம்பிக்கை 
இம்மூன்றும்  அருமையான  வித்தாகும்  ஒரு 
முத்தான எதிர் கால மலர் பூங்கா  பூத்துக் குலுங்க! 

எதிர்காலம் நமக்கு ஒரு வசந்த காலமாக மலரட்டும் !
எதிர் மறை நினைவும் உணர்வும் நம்மை விட்டு விலகட்டும் 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com