பறக்கக் கற்றுக்கொள்ள வருபவர்களின்
இறக்கைகளைக் கத்தரித்து அனுப்புகின்றன
கல்விக்கூடங்கள்...
மாணவர்களின்
அறிவுத்திறனை வளர்க்காது,
நினைவுத் திறனை சோதிப்பதோடு
நிறுத்திக் கொள்கிறது
கல்விமுறை..
படைப்புத் திறன்களை மழுங்கடித்து,
பதற்றமும் போட்டியும் உருவாக்கி,
பந்தயக் குதிரைகளாய்
மாணவர்களை விரட்டிக்
கொண்டிருக்கிறார்கள் ஆசிரியர்கள்...
மதிப்பெண்கள் மட்டுமே,
எதிர்காலம் உட்பட
எல்லாமும் நிர்ணயிக்கும்
சர்வ வல்லமை கொண்ட
ஒற்றைக் காரணியானதால்,
மனப்பாடம் செய்து
மதிப்பெண் பெறும் எந்திரங்களாகவே
மாறிப் போனார்கள் மாணவர்கள்..
அழுத்தங்களை எதிர்கொள்ள இயலாது
தற்கொலை செய்யும் கோழைகளாகவும்
கொலை புரியும் கொடூரர்களாகவும்
எதிர்கால இந்தியா பரிதபமாய் நிற்கிறது..!
கூடுகுதவாத ஏட்டுச் சுரையைப்
பயிரிடக் கற்றுத் தரும் இந்த
கல்வி முறை மாற்றப்பட வேண்டும்..
அதுவரை, உதவாக்கரைக்
கல்விக் கூடங்கள் பூட்டப்படவாவது
வேண்டும்..!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.