எதிர்காலம்:  சசி எழில்மணி

Updated on
1 min read

துள்ளித் திரிந்து விளையாடி
கவலையென்பதை ஏதுமறியா
பசுமை நினைவுகளாய்
மனதில் படிந்த
கடந்த காலம்

காலமென்னும் கயிற்றில்
கட்டிவைத்த பொம்மைபோல
ஆட்டுவிப்பார் யாரென்றறியாமல்
ஆடிக் கிடக்கும்
நிகழ்காலம்

அசைவ தெல்லாம்
அவன்செய லென்றால்
காலமும் மாறாதா
கவலைகள் தீராதா
பசுமை நிகழ்வுகள்
மீண்டும் துளிர்க்காதா
எதிர்பார்ப்புகள் கொட்டிக்கிடக்கும்
எதிர்காலம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com