தாகந்தணிக்க விலையற்ற நல்லகுடிநீர்!
கழனி செழிக்க பொய்க்கா மழைநீர்!
பிளந்த பாளங்கள் மூழ்கி
பாறை கசியும் சுனைநீர்!
விளைவித்த உயிர்ப்பினைக்
கொல்லாத விலை நீர்!
சிந்திச் சிந்தி வழியும்
கரிக்காத வியர்வை நீர்!
தன்னிலை மறந்து தனை
விஞ்சிக் கொல்லும் வேண்டாக்"குடி "நீர்!
துடைத்தெறியும் நாட்களை
எண்ணும் கண்ணீர்....என
எதிர்காலம் நீராலானது ...
நீர்த்திடலாகாது .....
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.