எத்தனையோ
ஏக்கங்கள்
இதயமதில்....!
எடுத்துரைக்க
வார்த்தைகள் இல்லை
என் மனதில் .....!
மூடிவைத்த புத்தகமாய்
எதுவும் ரசிக்கப்படாமலேயே
சிதைந்து போகும்
உணர்வலைகள்..!
சோகத்தைச் சுமந்து
தூக்கத்தை மறந்து
வெறுமனே முடிக்கிடக்கும்
அப்பாவி விழிகள்..!
காலம் தந்த - எமது
காயங்கள்
கரைந்து போக
கனிவான ஓர் எதிர்காலம்
எமக்குக் கிடைக்குமா.....!!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.