எதில் காலம்: பொன். குமார்

Updated on
1 min read

நிகழ் காலத்தில் 
இருந்தாலும்
மக்களை வாழச் செய்கிறது
எதிர் காலம்.

எதிர் காலத்தை
எதிர் பார்த்தே
இருக்கும் காலத்தை
இழப்பவரும் உண்டு.

அவரவர் எதிர்காலம்
அவரவருக்கு தெரியாத தால்
வாழும் காலத்தில்
வாடுபவரும் உண்டு.

தற்காலச் சூழ்நிலை
திருப்திகரமாக இல்லாத தால்
எதிர் காலம் 
எப்படி இருக்குமோ என்று
அச்சப் படுவோரும் உண்டு.

சுயநலமே மிகுந்து போனதால்
கவலைப் படுவோரில்லாமல்
நாசமாகிக் கொண்டிருக்கிறது
நாட்டின் எதிர் காலம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com