மல்லுக் கட்டும் ஜல்லிக் கட்டு: பொன். குமார்

Updated on
1 min read

தமிழர்களின் 
விளையாட்டாக இருந்தது
ஐல்லிக் கட்டு.

அரசியல் விளையாடியதால்
தடை விதிக்கப் பட்டு
தடுமாறுகிறது தமிழ்நாட்டில்
ஜல்லிக் கட்டு.

ஐல்லிக்கட்டு விளையாட்டில்
காளைகளோடு போராடி
வெற்றிப் பெற்றவன்
ஜல்லிக் கட்டுக்காக போராடி
வெற்றிப் பெற முடியவில்லை.

மனிதர்களிடம் இல்லாத
மனித நேயத்தை
மாடுகளிடம் காட்டுவதாக
மார் தட்டுகிறது
மத்திய அரசு.

ஐல்லிக் கட்டுக்கான 
தடை என்பது
தமிழர்களின் மீதான
தடையாகவே உள்ளது.
தமிழர்களை அடக்கும்
முயற்சியாகவே உள்ளது.

ஐல்லிக் கட்டுக்காக
மல்லுக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்
தமிழர்கள்.
ஏமாற்றிக் கொண்டிருக்கிறர்கள்
மத்தியில் இருப்பவர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com