ஏறுதழுவிய வீரமண்
இன்று சட்டத்தின்
பிடியில் கைதி!
வறண்டுபோன
நெற்கதிர்களைப் பார்த்து
ஏறுதழுவிய விவசாயி
வீரமண்ணைத் தழுவிய
கண்ணீர்க்கோலம்!
வானத்து அமிர்தவர்ஷிணி
தீவிரவாத அரசியலில்
மழைக் கண்களிரண்டை
இறுகப் பொத்திய
கொடூரத்தில்
மல்லுக்கட்டும்
ஜல்லிக்கட்டும்
மறைந்துவிட்டதோ!
காளைகள் அடக்கி
வீரத்தை நிலைநிறுத்தும்
இளம் மனித காளைகள்
நாட்டைத் திருத்த
மறந்ததேனோ!
ஒன்றுபட்டால்
தீவிரவாத களைகள்
கருவேலக்காடுகளாய்
தீப்பற்றி அழிக்க இயலாதோ!
உன்னால் முடியும்
என்றே முன்னிறுத்திய
மல்லுக்கட்டும்
ஜல்லிக்கட்டின்
உண்மை உணர்ந்த
இளைஞர் கூட்டம்
ஒன்று திரளும்
நாள் எந்நாளோ!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.