சட்டம்: சசி எழில்மணி

Updated on
1 min read

யாவரும் சமமென்று
நாட்டிற்கே ஒன்றென்று
ஏட்டிலே எழுதிவைத்தார்

ஆள்வோர் மனத்தினிலே
தோன்றும்  சாதகத்தை
அதனுள்ளே புகுத்திவைத்தார் 

நீதியும் நேர்மையும்
தடைபட்டுப் போனதேனோ?

காத்திடும் வேலியை
காவலைத் தாண்டியே
செல்லவே செய்ததேனோ?

யாவும் கூட்டிலே
வாழ்கின்ற
பறவையைப் போலவே
அடைபட்டுக் கிடப்பதேனோ?

இருப்போரிடம் தலைவணங்கி
இல்லார்த்தலை குனியவைக்கும்
சட்டம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com