சட்டம்: -பெருமழை விஜய்

Updated on
1 min read

சட்டமா
தமிழ் நாட்டிலா?!
அதைத்தான் கொளுத்தி விட்டார்களே!

நியாயமா?
நம் நாட்டிலா?!
அதைத்தான் புதைத்து விட்டார்களே!

நேர்மையா?
இந் நாட்டிலா?!
அதைத்தான் விற்று விட்டார்களே!

கர்ப்பிணிப் பெண்ணின்
கருக் கலைத்த காவலரை...
சட்டம் என்ன செய்யப் போகிறது?

தடி எடுத்து
வாகனம் உடைத்தவர்கள்
காவலர் என்பதே களங்கந்தானே?!

ஆட்டோவை...
மீன் கடைகளை...
எரிப்பதற்குத்தான் காவலர்களா?!

காக்கிக்குள்...
இதயத்திற்குப் பதிலாய்...
இரும்பையா இறைவன் வைத்தான்?!

அரசாங்கம்...
காவல் துறை எதுவும் 
எங்களுக்கு வேண்டாம்!

நாங்கள்...
உழைத்துச் சம்பாதித்ததே...
எங்களுக்கு
உதவ வில்லையே!

சட்டம்...
அரசு... இவையெல்லாம்
சந்தர்ப்ப வாதங்கள்!

ஏழைகள்வாழ்வில் என்றுமே 
கனத்த இருள்தான்!

காப்பாற்றும்
சட்டமென்று நினைத்தால்...
மிஞ்சுவது சங்கடங்களே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com