சட்டம்: உத்ரன்

Updated on
1 min read
சட்டத்தை மதிக்கும் நாட்டில்சங்கடம் குறைந்து போகும்!பட்டத்தை வாங்கி வந்தோர்பலரும் அதை மதிப்பதில்லை!எந் நாடும் வல்லரசாகும்எத் தவறும் குறைவேயானால்!பன் னாட்டு சட்டங்களையும்பாரினில் மதித்தல் வேண்டும்!இந்திய நாட்டில் சட்டம்இளைத்தோரைக் காப்ப தில்லை!பணம் படைத்தோரின் பக்கம்பக்குவமாய் அது வளைந்துவிடும்!சட்டத்தின் முன்னால் சம ம்தான்என்றும் நாம் அனைவருமே!என்பதை உறுதி செய்தால்இந்தியா விரைந்து வல்லரசாகும்!அல்லற்படுபவன் வயிற்றில்அடிக்கும்எந்தச் சட்டமும் நிலைபெறாது!மக்களை ஒடுக்கும் எந்தச்சட்டமும்மக்களாட்சியில் நிலை பெறாது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com