விடுதலை: சசி எழில்மணி

Updated on
1 min read

கூட்டிலே அடைபட்டு
குறுகிய எண்ணத்தை
மனதிலே வளர்த்து
தனக்கான அடையாளத்தை
இழந்து விட்டு
தன்னுடைய பண்புகளை
மறந்து விட்டு
கூண்டொன்றே வாழ்வென்று
நினைத்துக் கொண்டு
வாழ்ந்திருக்கும்
பறவை போல
நாட்டிலும் சிலருள்ளார்
தனக்கான வாழ்வதனை
பிறர் வகுக்கக் கொடுப்பார்
அவர் சிறகிருந்தும்
பறக்கப் பயப்படும்
பறவையாய் உள்ளார்

கூட்டைத் திறந்து விட்டாலும்
உலகறியா பறவையது
வெளிச் செல்ல பயப்படும்
அது தன் குணத்தை இழந்திடும்

குணம் மறந்து
வாழும் மனிதா
நமக்கான வாழ்வதனை
கொள்கையாய் நாம் வகுத்து
கட்டுண்டு வாழ்வதே
விடுதலை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com