விடுதலை: ஆபிரகாம் வேளாங்கண்ணி

Updated on
1 min read

நடு நிலையல்லாது
படு கொலை ஜனநாயகமதை
உறங்கவிடாது
படும் கவலை விடுதலை நாள்
எந்நாளோ அந்நாளே பூரண நிம்மதி

வெள்ளை காகிதங்கள் அது
வெள்ளையாய் இருக்கும் வரை
மதிப்பு  இல்லையே

அதுவே பணமாக மாறினால்
மடித்தாலும் கசக்கினாலும்
அழுக்கு பட்டாலும்
அதே மரியாதை
குறைவதில்லை

கிலுகிலுப்பை ஆட்டுவோர்
பின்னே பறந்தோடும்
சிசுக்கள் கூட்டம்

கிளுகிளுப்பு ஊட்டுவோர்
பின்னே பறந்தோடும்  
பதவியாசை கூட்டம்

கலகலப்பு மாய்ந்து
வெகுநாட்கள் ஆயிற்று
நாட்டிலே வீட்டிலும்

சலசலப்பு மூலைக்கு மூலை
விடிவு ஒன்று வாராதோ
விடுதலை எனும் பெயராலே

விற்கப் படுகின்ற
ஓட்டு உரிமையை
வாங்கியோர் நடத்தும்
அராஜகங்கள்

நீரு கொடுக்கின்ற ஆறும்
சோறு கொடுக்கின்ற நிலம்
வெடித்து வீணகுமோ
ஊரும் செழியாது தேரும்
ஊராது போகுமோ

எங்கும் எதிலும் கண்மூடித்
தன போராட்டங்களால்
அன்றாடம் காய்ச்சிகளுக்கு
போனது அன்றைய ஜீவனம்

உன் செல்வாக்கென்ன
என் செல்வாக்கென்ன
வென்று ஒருவர் மீது
ஒருவர் சாடல்கள்

விடிவு ஒன்று பிறக்காதோ
விடுதலை பெயர்ச்சூடி
சுதந்திரமாய் வாழ்ந்திட

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com