வரலாற்றில்
வீர மங்கையராக திகழ்ந்தவர்
வேலு நாச்சியார்.
விடுதலைக்காக
வீரவாள் சுழற்றினார்.
தேவதாசி முறையை ஒழித்து
தேசம் போற்றும் பெண்ணாக
திகழ்ந்தார்
மங்கையர் திலகம்
முத்துலட்சுமி ரெட்டி.
தேசத் தலைவரின்
நேச மகளாக பிறந்து
இந்தியாவின்
இரும்பு பெண்மணியாக
உலகை வியக்கச் செய்தார்
எழுச்சி பெண்மணி
இந்திரா காந்தி.
வீரத்தின் அடையாளமாக
விளைந்து கொண்டேயுள்ளார்கள்
வரலாற்றில்
வீரமங்கையர்கள்.
அடையாளம் கண்டு
அவர்கள்
போற்றப்பட வேண்டும்.
பதியப்பட வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.