வீர மங்கை: சசி எழில்மணி

Updated on
1 min read

மரபிலே புதையுண்ட
வீரத்தை
நெஞ்சிலே உரமாய்
சேர்த்து வைப்பாள்

தாயாக ஆனபின்
சேய்க்கு உணவாக
பாலுடன் வீரத்தை
ஊட்டி வளர்ப்பாள்

நாட்டிற்கொரு கேடென்றால்
ஈன்றெடுத்த மகவை
போருக்கு அனுப்பி வைப்பாள்

நெஞ்சிலே வேல் பாய்ந்தால்
ஏற்றம் கண்டு மகிழ்வாள்
புறமுதுகிட்டாள்
காரி உமிழ்வால்

எதிர்த்து வரும் புலியைக்கூட
முறம் கொண்டு விரட்டுவாள்

முத்தமிழ் பால்குடித்த மூத்தவள்
சங்கத்தமிழாலே சந்ததியை வளர்த்தவள்
பயமென்பதை முளையிலேயே
கிள்ளி எரிபவள்
தமிழ்ப் பெண்ணல்லோ
வீர மங்கை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com