வீர மங்கை: தவமணி ரீகன்

Updated on
1 min read

இவ்வுலகில்
இறைவன் படைத்தவற்றில்
இறைவன் கூட நிகரற்ற
இனம் பெண்...

இல்லம் தோறும்
இன்ப மழை பொழிபவள்
அவள்...

அனைத்தையும் அடுத்தவர்க்காய்
அர்பணித்தவள்
அன்பை மட்டுமே எதிர் பார்ப்பவள்...

அனைத்து நல்வளிகளும்
அவள்  காட்டியவை...
உலகில் அதிக வலிகள்
அனுபவிப்பவள்
அவள் தானே...

தன்மானத்தின்
தனிஉருவம் அவள்...

அன்னையும் அவளே
சகோதரியும் அவளே
தோழியும் அவளே
காதலியும் அவளே
மனைவியும் அவளே
மகளும் அவளே

உலகில் உள்ள
அனைத்து உறவுகளும்
அவள்  கொடுத்தவையே...

இன்பங்களின்
தொழிற்சாலை பெண்..

இன்னல்களின்
மயானமும் அவளே...

அன்பென்ற வார்த்தையின்
அகராதி அவளே...

அவள்
தெய்வம் போன்றவள்
அல்ல..

கண்முன் தோன்றிய
கடவுள் அவள்...

பூமியில் பிறந்த  தேவதை
அவள்...

தன் வாழ்நாள் முழுவதும்
அடுத்தவர்களிற்காக வாழும்
ஒரே இனம் அவள்...

அவளுடன் ஒப்பிட
மெழுகுவர்த்தி கூட
தகுதியற்றது...

பெண் என்றும் அடிமை அல்ல..,
இந்த அகிலம் தான் அந்த வீர மங்கையின் அடிமை..!

மாதர் தமை இழிவு செய்யும்
மடமை தனை கொளுத்துவோம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com