வீரமங்கை: மு.செல்வராசன் 

Updated on
1 min read

அன்னை விலங்கை அறுப்பான் வேண்டித் 
தன்னை விலங்கொடு தளைத்த மறக்குல 
மங்கையர் யாவர்க்கும் வீர வணக்கம் 

விடுதலை கெட்டுக் கெடுதலை ஓங்கிய 
அடிமை நாட்டின் அல்லலை நீக்க 
வெள்ளையார்க் கெதிராய் வீறுகொண்டு எழுந்து 
வாளேந்திப் போர்புரிந்த வனிதையர் திலகங்கள் 
தாள்பணிந்து போற்றுவோம் வீர வணக்கம் 

உடலால் உளத்தால் உரையால் உணர்வால் 
அடலேறாய் நின்று விடுதலை வேள்வியில் 
உடல்பொருள் ஆவியை ஆகுதி  யாக்கிய
படைமடம்  படாத  பாவையர் யாவர்க்கும் 
தினம்தினம் செலுத்துவோம் வீர  வணக்கம் 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com