நிழல் தேடி : ஆபிரகாம் வேளாங்கண்ணி

Updated on
1 min read

நிழல் தேடி நாம் தான் 
பயணிக்க வேண்டும் என்பது 
வாழ்வின் நியதி

நம்மைத் தேடி 
உயிர் நிழல்கள் வருவதுண்டு 
பலப்பல ரூபத்திலே

அன்னை நிழலுக்குமாக
தந்தை நிழலுக்குமாக
ஏங்கித்தவிக்கும் மாசற்ற 
பிள்ளைகள் ஆயிரம்

அன்னை தந்தை என்று 
இருந்தது நிஜமா பொய்யா  
குழந்தைகள் விக்கல்கள்

சில வேற்று " நிழல் தேடி"  
மாற்று நிழல் தேடி வந்து 
அமைகிறது  சிலரோடு 

அதையே ஏற்றுக்கொண்டு 
போகும் நிலை கிடைக்கும்
பாடத்தை கற்றுக்கொண்டு

துக்கம் இருக்கிறது உள்ளத்தில் பலருக்கு
ஆனாலும்
சொர்க்கம் தெரிகிறது
முகத்திலே சிலருக்கு

நிழல்களை காத்து நிருத்திட
ஆதவன் மறந்துவிட்டால்
அந்த தருணம் பார்த்து
காலன் அவன் நிழல்களை
மறைத்தே விடுவான்

உள்ளத்தால் நிழல் தேடி
பயனில்லை; அறிவால்
நிழல் தேடி பயனில்லை

ஆன்மாவால் "நிழல் தேடி" 
ஆண்டவனே நிழலாய் துணை நின்றான்

இனியொரு  பயமும் இல்லை; 
இச்சகத்தினை வென்றிடுவேன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com