நிழல் தேடி: கவிஞர் மா.உலகநாதன்

Updated on
1 min read

நித்தமும் நிழல் தேடி 
அலைவர் எத்தனையோ
பேர் உண்டு;
கானலில் களைப்புறுவார்
நிழல் தேடி அலைவார்;
ஆசையில் அலையும் மனம் கொள்வோர்
அன்றாடம் வேண்டுவார் ஆறுதல் நிழல்!
ஒன்றின் அருமை இன்னொன்றால் தான் புலப்படும்;
வெயிலின் அருமை
நிழலில் தான்  தெரியும் என்பதைப் போல!
மாலையில் நீண்டு
மதியத்தில் குறுகி
என்றும் நம்மோடு வரும்
நம்பிக்கைத் தோழன்
நம் நிழல்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com