ஆறோடும் நீரோடும்;ச.கிறிஸ்து ஞான வள்ளுவன்

Updated on
1 min read

வறண்ட மேகத்தையும்
மழையாய் அழ வைக்கும்
மந்திர சக்தி மரம்
பச்சை மரத்தை வெட்டாதே
பட்டமரத்தை வெட்டலாம் நீ
அருகில் ஒரு செடி நட்டால்
இப்படி நீ செய்தால்
இடைவிடாது மழை பெய்யும்.

மரத்தால் பெய்த மழையை
ஒரு சொட்டும் வீணாக்காது
ஏரி குளம் குட்டையென
எல்லாவற்றிலும் நீ தேக்கு
தேக்கும் நீரில் ஒரு பாதி
நிலத்தடி நீராகி உயருமே நீர்மட்டம்
மறுபாதி ஆவியாகி பெய்யுமே மழையாக...

மரத்தால் ஒரு மழை
தேக்கும் நீரால் மறுமழை
இருமழையின் நீர் தேங்கி
பெய்யுமே மூன்றாம் மழை
மாதம் மும்மாரி பெய்தால்
ஆறோடும் வழியெங்கும்
நீரோடும் வெள்ளமாக
நம் மனம் துள்ளுமே மகிழ்ச்சியாலே...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com