ஆறோடும் நீரோடும்: ரீகன். ஜெயக்குமார்

Updated on
1 min read

பட்டம் பெற்றோரெல்லாம்
பட்டினம் நோக்கிப் படைஎடுத்து
படிப்பிற்க்கேற்ற வேலை கேட்பார்
வேலைக்கேற்ற வெகுமதி கேட்பார்

வெகுமதிக்கேற்ற வீடு கேட்பார்
வீட்டிற்கேற்ற பெண் கேட்பார்
பெண்ணிற்கேற்ற பொன் கேட்பார்

தனக்கென வட்டமிட்டு
வட்டத்துக்குள் திட்டமிட்டு
திட்டத்துக்குள்ளே கொட்ட மிட்டு

தற்பெருமையை தனதாக்கிக்கொள்வார்
ஆனால் பாமரனோ
கிடைத்த வேலையை செய்து

கொடுத்த கூலியை பெற்று
அடுத்த வேலை உணவிற்க்கு
உழைப்பை உறுதுனையாக்கி

எருது கூட்டி ஏரு பூட்டி ஏரோடும்
சேரோடும் நீரோடும் ஆறோடும் ஊரோடும்
வேரோடும் பயிரோடு போராடி

ஒட்டிய வயிறும் கட்டிய கோவனமுமாய்
உடுத்த உடையின்றி உண்ண உணவின்றி

பட்டினியை பரிசாக பெறுவது
படிப்பாளியின் பசியைப்போக்க
விண்ணை நம்பி மண்ணை பொன்னாக்கி

மரணத்திடம் மண்டியிடும்
மகான்களை கண்டு ரசிக்கிறோம்

அவர்தம் உணவை ருசிக்கிறோம்
பாமரனே இன்றைய சமுதாயத்தினை
காக்கப்பட வேண்டிய கண்ணாடி

என்பதை படித்தவர் மத்தியில்
எடுத்துரைத்தால் பரிவட்டம் கட்ட மாட்டார்
இருப்பினும் எடுத்துரைப்பது என் கடமை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com