நீர் வற்றிய குளம்: பாலா ஆர்.எம்

Updated on
1 min read

அண்ணார்ந்து பார்க்கிறேன்
மேகம் பக்கத்தில் தெரிந்தது
எட்டிவிடலாம் என எண்ணி
ஏமாந்து போனேன்.
மேகத்துடன் பேசி நண்பனாகிவிடலாம்
என்று தோன்றுகிறது
நண்பனாகிவிட்டால் அவனிடம்
கூறி மழையை கேட்கலாம் என பேராசை பட்டு
தோற்றுப்போனேன்
அவனும் என் பக்கம்
சேராமல் கதிரவனுடன்
கைகோர்த்து விட்டான்
படுபாவி !
மழை இல்லாமல் என் கிராம குளம்
நீர் இன்றி வாடுகிறது
மீனும் நீரின்றி சாகிறது
மாரி பெய்யும்
குளம் நிறையும்
மீன்கள் துள்ளி துள்ளி விளையாடும்
அந்த நாளுக்காக காத்திருந்தேன்....

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com