நீர் வற்றிய குளம்: பாவலர் கருமலைத்தமிழாழன்

Updated on
1 min read
மாதம்மும்   மாரிபெய்து   குளங்கள்  ஏரி         மாக்கடல்போல்  நீர்நிறைந்து  மீன்கள்  துள்ளநாதத்தை  எழுப்புமலை   கரையைத்   தட்டி           நாரைக்கும்   கொக்குக்கும்   அழைப்ப   னுப்பவேதம்போல்   நாற்புறமும்   மரம்வ   ளர்ந்து            வேதவொலி   போல்புட்கள்   ஒலியெ   ழுப்ப  ஓதமுடன்   இயற்கையன்னை   எழிலைக்   கொட்டி            ஓங்காரம்   செய்ததெல்லாம்   எங்கே  எங்கே !அன்புடனே   மனிதநேயம்  செழித்த   நட்பில்            அரவணைத்த   கிராமத்து   மக்கள்   போலநன்னீராய்   ஊர்நடுவே   நிறைந்தி   ருந்து            நாளெல்லாம்   தாகத்தைத்  தீர்த்த   பொய்கைவன்மம்பொய்   களவுசூது   கயமை   என்றே            வளர்ந்துமனம்   தன்னலத்தால்   மனித  நேயம்அன்புநட்பு   வற்றிட்ட   நகர   மக்கள்            அவலம்போல்   ஆனதெல்லா   குளங்கள்   இன்று !மலைதகர்த்தார்   காடழித்தார்   முகில்த  டுத்து            மழைபெய்த   வழியழித்து  வறட்சி  செய்தார்அலைதவழ்ந்த   குளங்கனினை   மனைக   ளாக்கி            அருந்துநீர்க்குக்   கையேந்தி   இரக்க   லானார்உலைதன்னில்   விதைநெல்லை   இட்ட   போல            ஊர்காத்த   குளமழித்தே   உழவை  மாய்த்தார்தலைமுறைகள்  அழிந்திடாமல்   வாழ   வைக்கத்            தாத்தாக்கள்   போல்குளத்தைக் காப்போம்  வாரீர் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com