மனசு நிறைந்தால்
வாழ்வு இனிக்கும்
தண்ணீர் நிறைந்தால்
குளமும் சிரிக்கும்
பல்லுயிரும் அங்கே
துள்ளி விளையாடுவதால்.
முற்றிப் பழம் வெடித்தால்
கனியின் சுவை கூடும்
வற்றி குளம் வெடித்தால்
வளர்ந்த பயிர் வாடும்
பயிர் வாடியதால் விவசாயி
உயிர் விடுகிறான் நாளும்.
நிறைந்து வழிந்த குளம்
வறண்டு போனதென்ன?
உற்றுக் கவனித்தால்
உண்மை புரியவரும்
குளத்தை தூர்வாரவில்லை
நீர்வரும் வழியை அடைத்துவிட்டோம்.
தண்ணீர் வரும் வழியெங்கும்
ஆக்கிரமிப்பு ஆனபின்னே
குளம் நிறைய வழியெங்கே?
ஆக்கிரமிப்பை அகற்றிவிட்டால்
அடுத்த மழையில் நீர் நிறையும்
உடன் செய்வோம் பலன் பெறுவோம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.