அன்று
துள்ளிக்குதித்து, நீச்சலடித்த குளம்.
துள்ளிக்குதிக்கும், மீன்களை,
தூண்டில் போட்டுப்பிடித்த குளம்.
கூட்டம் கூட்டமாக, பறவைகள் தேடிவந்த குளம்.
படர்ந்த, தாமரையிலைகள், மத்தியில்,
அடர்ந்ததாமரை, மலர்கள்,
திரண்டு மலர்ந்து, மணம் வீசிய திருக்குளம்.
அக்கரை செல்ல, படகுகள், வலம் வந்த குளம்
இன்று,
நீர் வற்றிப் போனதனால் - அது
விளையாட்டுக்களமானதே -நம்
மனங்கள், எல்லாம், கனமானதே..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.