ஊரின் நடுவே
ஒரு பெரும்பள்ளமாக
காட்சியளிக்கிறது
நீர் வற்றிய குளம்.
பிள்ளைகள் விளையாட
ஒரு மைதானமாகி விட்டது
நீர் வற்றிய குளம்.
இரண்டு ஊர்களை
இணைக்கும் பாலமாகி விட்டது
நீர் வற்றிய குளம்.
மனிதர்களைப் போல
மழையை எதிர்பார்த்துள்ளது
நீர் வற்றிய குளம்.
பழைய நினைவுகளில்
பறவைகளை நினைத்து ஏங்குகிறது
நீர வற்றிய குளம்.
உயிர்களை வாழ வைத்து
உயிரற்று தோற்றமளிக்கிறது
நீர் வற்றிய குளம்.
அரசியல்வாதிகள்
கண்ணில் பட்டு
காணாமல் போய்விடுமோவென
கலக்கத்தையே தருகிறது
நீர்வற்றிய குளம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.