நீர்வற்றிய குளம்: மீனா தேவராஜன்

Updated on
1 min read

நீரென்னும் ஆடை களைந்தாய்த் தெப்பக்குளமே
காரென்னும் காதலன் கோபமாய்க் கைவிட்டனோ 
மாரியென்னும் பாரி இரக்கமாய்ப் பார்க்கல்லையோ
தூரும் துண்டுதுண்டாய்க்காய்ந்து வெடித்ததேனோ?

கொட்டியும் ஆம்பலும் படர்ந்து கிடக்கலையே
வெட்ட வெளியாய்ப் பொட்டலாய்க் கிடக்கிறாயே
மாதங்களானால் நீ காணாது மறைந்து விடுவாய்
காதர்கள் உன்மீது கட்டடங்கள் கட்டுவாரன்றோ

வற்றிய குளத்தில் வற்றின நீர்வாழ் உயிர்கள்
பற்றிய வேர் பற்றற விட்டன கொடிசெடிகள் 
சற்றும் கவலை கொள்ளற்க இயற்கை என்றும்
முற்றும் கைவிடுவதில்லைஇரக்கம் காட்டும்

காய்ந்தவன் காய்ந்தவன் அல்ல செங்கதிரும்
ஆய்ந்து ஆய்ந்து சேர்க்கும் மேகத்தொட்டியும்
வேய் குழல்களாய் விண்ணிலிருந்து கொட்டும்
தாயாய் உயிர் தரும் மாரி தரணியெங்கும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com