ஒற்றைச்சிறகோடு! நத்தம். எஸ்.சுரேஷ்பாபு.

Updated on
1 min read
உயரே பறக்கையில் பறவையொன்றுஉதிர்ந்துச் சென்றது ஒற்றைச்சிறகு!உதிர்ந்ததும் வீசிய காற்றில்உயரே எழுந்து பறந்தது அந்த ஒற்றைச்சிறகு!ஒற்றைச்சிறகோடு பயணமானேன்!காற்றின் திசையில் பயணமானது ஒற்றைச்சிறகு!காற்றின் வேகத்தில் எழுந்து வேகம் குறைகையில் அடங்கி!மண்ணிலே புரண்டு கல்லிலே விழுந்துகால்களில் மிதிபட்டு மரக்கிளைகளில் சிக்குண்டுகாற்றிழுத்த வேகத்தில் பயணித்த ஒற்றைச்சிறகுஒன்றை உணர்த்திச் சென்றது!பறவையின் சிறகுகளில் ஒன்றாய் இருந்தபோதுகாற்றைக் கிழித்து பறவையை உயரப் பறக்கச் செய்தது.சிறகுகளை விட்டு பிரிந்து ஒற்றைச் சிறகாய் உதிர்கையில்காற்றின் வேகத்திற்கு கட்டுப்பட்டு கிழிந்து போனது!கூடி வாழ்ந்தால் கோடி நன்மை!தேடி வந்து உணர்த்திச் சென்றது ஒற்றைச்சிறகு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com