ஒற்றைச் சிறகோடு: வே.புனிதா வேளாங்கண்ணி

Updated on
1 min read
அதிகாலையில்விழிக்கும் தாத்தாஅடுக்குபானையில் கை விட்டுகம்பையும்..கேப்பையையும்..கை நிறைய அள்ளி..வழி நெடுக தூவிக்கொண்டே செல்வார்..வாய்க்கா..வரப்புக்கு...அனைத்து பறவைகளும்அக மகிழ்ந்து கொரித்துக்கொண்டே செல்லும்அருகில் இருக்கும் மரங்களில்அனைத்தும் தஞ்சமடைந்துவிடும்...பட பட வென‌அடித்துக்கொண்டுவரும்பறவைகளுக்காகவேஅப்பத்தா வாசலில்உமியை புடைத்துப்போடும்..சர்க்காரின் உத்தரவால்பை பாஸ் சாலைக்காக‌வெட்டப்பட்டன...அவர்களின்இருப்பிடங்கள்...(மரங்கள்)அதிகாலை விழித்த‌அப்பத்தா ..தாத்தாவின் கால்களில்தட்டுப்பட்டது ...அத்தனை ஒற்றைச்சிறகுகளும்...அந்த ஒற்றைச்சிறகை கையில் கொண்டுபுலம்புகிறது...தள்ளாடும் இந்த ஜீவன்கள்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com