ஒற்றைச் சிறகோடு:  ச.கிறிஸ்து ஞான வள்ளுவன்

Updated on
1 min read

வாழ்க்கை வளமாக 
வேண்டும் இரு சிறகு
கல்வியும் செல்வமும் அது
செல்வம் இல்லாமலும் வாழலாம் 
கல்வி என்ற 
ஒற்றைச் சிறகிருந்தால்...

வெற்றியை எட்ட
வேண்டும் இரு சிறகு
முயற்சியும் பயிற்சியும் அது
முயற்சி என்ற
ஒற்றைச் சிறகிருந்தால் 
பயிற்சி தானே வந்துவிடும்...

வாழ்க்கை அனுபவம் பெற
வேண்டும் இரு சிறகு
வெற்றியும் தோல்வியும் அது
தோல்வி என்ற சிறகால் கூட
தொடர்ந்து முயற்சித்தால்
அனுபவத்தால் வெற்றி கிட்டும்...

சிறகு எத்தனை இருந்தாலும்
வெற்றி தானாய் வராது
இருக்கும் சிறகை நாம்
சிறப்பாய் பயன்படுத்தினால் 
ஒற்றைச் சிறகோடு பறந்தாலும்
வெற்றியின் எல்லையை எளிதில் அடையலாம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com