ஒற்றைச் சிறகோடு: கவிஞர் பூ. சுப்ரமணியன்

Updated on
1 min read

ஓவியன் தூரிகை
வண்ணத்தில் மூழ்கி
வண்ண ஓவியமானது !

வீணையின் தந்திகளில்
விரல்கள் உறவாடி
இன்னிசையானது !

கவிஞன் எழுதுகோல்
வார்த்தையுடன் விளையாடி
கவிதையானது !

கடல் அலைகள் மேகத்தில்
கலந்து பேசி
கொட்டும் மழையானது!

விண்ணில் சிறகடித்து
மண்ணை நோக்கி
ஒற்றைச் சிறகோடு
சுற்றிய வெண்புறா
‘வன்முறைக்கு விடை கொடு
அன்புக்கு இடம் கொடு
உண்மைக்கு உயிர் கொடு
அமைதிக்கு கை கொடு ‘
மௌனமாகப் பேசி – உலகின்
சமாதானச் சின்னமானது !             

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com