கருவில் தொலைந்த குழந்தை: இராச. கிருட்டினன்

Updated on
1 min read

காணாமற் போனது
கருவிலேயே...
கர்ணனா?
கைகழுவியது யார் ?

பிறர் பிழையால்
ஆரம்பத்திலேயே முடிந்த
வாழ்க்கைப் பந்தயம் ?

பாக்கியம் 
பறிமுதல் செய்யப்பட்ட
புத்திர காமேஷ்டி?

குரல் கேட்காத
குறைக் குழந்தையின் அழுகை...
உணர்ந்தும் உணராமல்
சுமந்தவள்...?

மாவடுவா மனிதவடு ?

புரட்டும் முன்பே
பரியாமற்போன
புதுக்கவிதை ?

யாருடைய பாவத்தின்
சம்பளம் ?

ஊணர்வு வரும் முன்பே
யாரிடம் கேட்பது
பாவமன்னிப்பு..?

தனுகரண விதிகள்
புவனம் வரும் முன்பே 
பொய்த்தது!

தலைவிதியை
எழுத ஆரம்பிக்கும் போதே
பிரமனின் எழுதுகோல் 
முறிந்தது ?

மன்னித்துவிடு இறைவா...
குற்றவாளிக் கூண்டில்
யார் நிறுத்தப்பட்டாலும்
உடனாய் நீயும் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com