கருவில் தொலைந்த குழந்தை:  ஜெயா வெங்கட்

Updated on
1 min read
மங்கையாய் பிறப்பதற்கு எம் மண்ணில்மாதவம் செய்திடவேண்டுமென்பர்! மாறாக பிறப்பது பெண்சிசு என்றால்மாய்த்திடும் கூட்டமும் உண்டிங்கு! அருவாயிருக்கும் ஆண்டவன் படைப்பில் தருவாய் வளர்ந்து தழைப்பவளைஉருஅது பெண்ணென அறிந்துகருவிலே அழிப்பது பாவமன்றோ? பொறுப்பற்ற பெற்றோரின் நிலையால்வெறுப்புற்ற உற்றாரின் செயலால்பெற்றதை வளர்ப்பது சுமையென்றுகற்றோரும் நினைப்பது கயமையன்றோ? விழுதாக குடும்பத்தை தாங்குபவளைபழுதென பழிதீர்க்கும் பாதகரைகழுவதில் ஏற்ற வேண்டுமெனஎழுதி இயற்றுவோம் சட்டமிங்கு!வாழ வேண்டிய பெண்சிசுவைவருமுன்காப்பதுவிவேகமென்றால்கருவூலமாய்காக்கவேண்டியவளைகருவிலே தொலைப்பது துரோகமன்றோ? 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com