கருவில் தொலைந்த குழந்தை:  பாவலர் கருமலைத்தமிழாழன்

Updated on
1 min read
முன்னோர்கள்  மனக்கருவில்  வளர்த்துத்  தந்த    முதன்மையான  பண்பொழுக்கக்  குழந்தை  தன்னைப்பன்னாட்டு  மோகத்தால்  பாதை  மாறிப்    பகட்டினிலே  உருமாற்றித்  தொலைத்து  விட்டோம்தன்னலத்தால்  யாதும்ஊர்  கேளிர்  என்னும்    தகுநட்பு  மனிதத்தை  விட்டு  விட்டோம்தன்மகனைத்  தன்னுயிரை  நீதிக்  காகத்    தந்திட்ட  நேர்மையினைக்  கொன்று  விட்டோம் !சங்கத்துத்  தமிழரெல்லாம்   சாதிக்  யற்ற    சமத்துவத்தில்   வாழ்ந்ததினைச்  சிறுமை  செய்துசங்கங்கள்  சாதிக்காய்  ஏற்ப  டுத்திச்    சண்டையினை  வீதிகளில்  போடு  கின்றோம்மங்கலமாய்  மூவேந்தர்   வளர்த்த  ளித்த    மாத்தமிழை  மூலையிலே  முடங்க  வைத்தேஎங்கிருந்தோ  வந்தவன்கால்  அடிமை  யாகி    ஏற்றமிகு  மானத்தைப்  புதைத்து  விட்டோம் !கருவினிலே   உள்ளசிசு   பெண்தான்  என்றால்    கருவினையே  கலைக்கின்ற  கயமை  போலஅருமன்றல்   சாதிமாறிப்  புரிந்தோர்  தம்மை    அழிக்கின்றபெற்றோரின்கொடுமைபோலபெருமைமிகு   தமிழ்மொழியைத்   தமிழ  னின்று    பெயர்சொல்லி  அழைப்பதற்கும்  நாணம்  கொண்டுதிருவிழாவில்  குழந்தையினைத்   தொலைத்தல்  போன்று    திருவனைத்தும்  தொலைத்திட்டான்  மொழியி  ழந்தே !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com