கருவில் தொலைந்த குழந்தை: கவிஞர் ராம்க்ருஷ்

Updated on
1 min read
தேர்வெழுத உட்கார்ந்த ஒரு நாளின் காலைப்பொழுதுஆர்வமுடன் கேள்வித் தாள் பார்த்து ஆசையாகியேகோர்வையாய் பதில் எழுதத் தொடங்கிய வேளையிலேவேர்வையுடன் போராட்டக் காரர்கள் உள்ளே வந்திடவிடைத்தாள்கள் விடைபெற்றன என்னை விட்டேஅடைகாத்த பதில்களெல்லாம் கண்ணில் நடனமாடதொடை நடுங்க எழுந்து வெளியேற வேண்டிய நிலைதடையாகி தேர்வு கருவில் தொலைந்த குழந்தையானதுபோட்டிக்குக் கவிதை எழுதி போர்க்கோலம் கொண்டிடஏட்டிக்குப் போட்டியாக அஞ்சலக விடுமுறை நீண்டிடஈட்டியாக காலம் கடந்தது நெஞ்சில் பாய்ந்து நின்றதுவாட்டிடும் மனம் கருவில் தொலைந்த குழந்தையானதுகண்களால் கவிதை படித்து வளர்ந்த நிலவுக் காதல்எண்களால் எழுத்தால் விவரிக்க இயலாவண்ணம்தண்ணென்று தழைத்து வளர்ந்தது மனப் புரிதலோடுபெண்ணென்ற பேதமை வருந்த சாதி மதம் தடையாகிபாதியில் நின்றது காதலும் கருகிப் போய் நொந்ததுஆதி மனிதர்கள் போலே இருந்திருந்தால் இந்த நிலைநாதியற்றுப் போயிருக்காது நடுக்கமும் ஆகியிருக்காதுவாதியற்ற வாழ்வு கருவில் தொலைந்த குழந்தையானதுமூத்த மருத்துவர் பாத்திரமேற்கச் சென்ற வயதானவர்பூத்த மலராக தலையெங்கும் முடியாக இருந்ததாலேகாத்தவராயராக வழுக்கைத் தலையர் வர பாத்திரமும்நீர்த்துப்போய் கருவில் தொலைந்த குழந்தையானதே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com