கருவில் தொலைந்த குழந்தை: ப. வீரக்குமார்

Updated on
1 min read

என் தாய்
அமுதூட்டி
கூந்தல் சிக்கல் நீக்கி
பள்ளிசெல்ல
முகாரிபாடும்
எனை
முகம் மாற்றி
பொட்டிட்டு
நெற்றிமுறித்து
விடைதந்தவளை
வினாவுடன் பார்த்து
ஈருளியில்
பின் உட்கார்ந்து
தாயிற்கு
தாலாட்டுக்காட்டி
தந்தை ஈருளியை
உயிர் பித்தலில்
இடைபிடித்து
குலுங்களோடு
பள்ளிசென்றேன்

பாடம் முடித்ததும் தூங்கிவிட்டேன்
விழித்துப்பார்க்க
சகதோழிகளுடன் 
கனவுகளைமாற்றி
நினைவோடு
அனாதை இல்லத்தில் 
தாய் தந்தைமுகம் அறியா
நான் . . . 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com