என்னிடமிருந்து வெளிப்படும் என் குழந்தைஎண்ணற்ற புள்ளினங்களுக்கு புகலிடமாய் இருப்பான் இம் மண்ணில் துய்க்கும் ஜீவன்களுக்குஇயன்றவரை பிராணவாயுவை வழங்குவான் நிழல் தருவதோடு நின்று விடாமல்நிலத்தில் மேற்கூரையாகவும் நிமிர்ந்திருப்பான்தன் வாழ்நாளை பிறருக்காகவே அற்பணிக்க தன்னையே அக்னிக்குக் கூட இறையாக்குவான் என்றெல்லாம் கற்பனை செய்திருந்தாள் சூலுற்றிருந்த அந்த விதைத்தாய். ஆனால் நடந்தது என்ன? பசுமை பூமியாகத் திகழ வேண்டிய நிலம் பாலைவனத் தரிசு நிலமாகக் கோலம் பூண்டது பிரம்மாண்ட கட்டடம் அங்கு எழும்பபார வண்டியானது மண்ணையும், காரையையும் கொண்டு வந்து கொட்டியதுதன் பெயர் துலங்க வேண்டுமென்று கட்டட ஒப்பந்தக்காரரின் குரூரச் செயலால் தொலைந்தது கருவில் இருந்த குழந்தை மட்டுமல்ல வினையை நொந்த எத்தனையோ விதைத்தாய்களும்தான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.