யார் இட்ட சாபம்: கே.நடராஜன்

Updated on
1 min read

இதோ வந்து விட்டது புதிய விடியல் 
பிறந்து விட்டது புதிய  பாரதம் !
புதுமை பல காண்போம் நாம் !
நமக்கு நாமே இனிமேல் !

சுதந்திர இந்திய விடியலில் என் 
தாத்தாவும்  அப்பாவும் கேட்ட 
முழக்கம் இது ! நான் பிறக்கவே 
இல்லை அப்போது ! 

ஒரு அப்பாவாக , தாத்தாவாக நான் 
இன்றும் கேட்கிறேன் அதே முழக்கம் !
ஆட்சியும் மாறுது ....காட்சியும் மாறுது !

புதிய விடியல் , புதிய பாரதம் முழக்கம் 
மட்டும் மாறவே இல்லையே ! 
பழகி விட்டேன் நானும் இந்த முழக்கம் 
தினம் தினம் கேட்டு !

புது விடியல் மட்டும் நான் காண 
முடியவில்லையே இன்னும் ! 
இது யார் இட்ட சாபம் ? 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com