என்றும் என் இதயத்தின்: பாவலர் கருமலைத்தமிழாழன்

Updated on
1 min read
என்தாயின்  குருதிவழி   என்னுள்  வந்தே            என்குருதி   தனில்கலந்து   நின்ற  வள்நீஎன்தாயின்  தாலாட்டுப்   பாட்டில்  வந்தே            என்செவியின்  உள்நுழைந்து   ஒலிப்ப  வள்நீஎன்தாய்தான்  கைபிடித்தே   அம்மா  வென்றே            என்கையால்  எழுதிவைக்க   நிலைத்த  வள்நீஎன்தாய்க்கும்   தாய்வழியே   வந்த   தமிழே            என்றுமென்றன்   இதயத்தின்   துடிப்பே   நீதான் !முத்தான  ஐந்துவகை  இலக்க  ணங்கள்            மூத்தசிறு  காப்பியங்கள்   வாழ்வை  ஏத்தும்சத்தான   திருக்குறளும்  பத்தும்  எட்டும்            சமயத்தின்  திருமுறைகள்  பிரபந்   தங்கள்சித்தர்தம்   மருத்துவங்கள்   மடமை   ஓட்டும்            சீர்திருத்த  பாரதிபா  வேந்தர்  பாட்டால்எத்திசையும்   புகழ்மணக்க   ஒளிரும்  தமிழே            என்றுமென்றன்   இதயத்தின்   உயிர்ப்பே   நீதான் !கூத்திற்கு   விதிவகுத்தும்   இசைநு  ணுக்கம்            கூறுகின்ற   நூல்வடித்தும்   ஐம்பூ  தத்தால்பூத்திருக்கும்  உலகத்தை   ஐந்தி  ணையாய்ப்            புலம்பிரித்தே   ஆட்சிசெய்யும்   தமிழே  தாயே !யாத்திடவே   கவிதைகளை  என்னுள்   நின்று            யாவருமே   போற்றுகின்ற   கவிஞ  னாக்கிஏத்தியெனைக்   காப்பதனால்  என்றும்  நீதான்            என்னுடைய   இதயத்தின்   உயிரே  என்பேன் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com