என்றும் என் இதயத்தில்: ஆபிரகாம் வேளாங்கண்ணி

Updated on
1 min read
அன்று என் இதயத்தில் சூடேறகொஞ்சி குலாவினாள் இன்று என் இதயத்தில் சூடாற ஊற்றி விலாவினாள் இனி என்றும் என் இதயத்தில் அவள் நினைவு உலாவிடலாகாது இக்காலத்திலேயே இளமைக்காலம் ஓடோடியது முதுமை காலம் நெருங்கி அவள் வந்தென்ன போயென்ன லாபம் காலமே போறாதகாலம் எனக்கேயன்றி உனக்கில்லை நீ நில்லாமல் ஓடிடு நிறம் மாறிப் போன அந்த நிகழ்வுகள் அழிவதில்லை நினைவுகள் சாட்சிசொல்லி நிறைவேறப் போவதில்லை நிரூபிக்கும் ஆதாரமில்லை மனம் பேசாது வாய்ப்பேச்சை உலகமென்றும் ஏற்பதுமில்லைமலர்களே கொஞ்சம் தேன் மதுரம் கொடுங்கள் அதை விருந்தாக கேட்கவில்லைமருந்தாக தாருங்களேன் ஏனெனில் எந்தனுக்கோ தீரா கொடிய காதல் நோயாம்மலர்களுக்கு விதவிதமானவண்ணம் தந்தார் எவரோ மனிதருக்கும் விதவிதமானஎண்ணம் தந்தார் அவரேவண்ணமோ கண்ணுக்கு இனிமை; எண்ணத்தால் எந்தனுக்கோ தனிமையோ இரண்டுக்கும் இடையிலிது நிறைவடையும் பதுமையோ நினைவு நிலைத்து நிற்கும் இடமெதுவெனில் இதயமேநீ இடம் விட்டு இடம் மாறலாம் இதயத்தை விட்டு நினைவுகள் உயிருள்ள வரை மாறுதில்லை சொத்து சுகங்கள் இடம் மாறலாம் என்றும் என் இதயத்தில் இருக்கும் அவளின் நினைவுகள் மாறிடாதோ அதுதான் ஏனென்று புரியவில்லை நினைவை மறக்க தெரியவில்லை 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com