நான் பூமிக்கு வந்தபோது நீ மகிழ்ந்தாய்! நான் துன்பறும்போது நீ வேதனை அடைந்தாய்! நான் வழிதவறியபோது திருத்தினாய்! எனக்கு தாய்போல் இல்லாமல் தோழியானாய்!பூப்பெய்தியபோது ஊட்டமிக்க உணவிட்டாய்! திருமண பிரிவின்போது தனியே நின்றழுதாய்!நான் பிள்ளை பெற்றபோது உடனிருந்து பேணிக்காத்தாய்! இன்றுவரை என் பிள்ளையை வளர்த்துவருகிறாய்!நான் எப்படி வாழவேண்டுமென்று வாயால்மட்டும் சொல்லாமல் வாழ்ந்து காட்டும் முன்மாதிரியே!உயிருள்ளவரை என்றும் என் இதயத்தில் நீதானே அம்மா…..!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.