வானத்தை விற்பனைக்கு விலைபேசி விற்கின்றார்; கானலையும் தண்ணீராய் காசுக்கு விற்கின்றார்; ஆனவரை பணத்திற்காய் அடிமையாகி போகின்றார்; ஈனரிவர் செயல்யாவும் என்றும்என் இதயத்தில்! அழுக்கெல்லாம் மேகமாக அழுதிடவே துடிக்கிறது; வழுக்குகிற பாசிகளோ வழுக்கிவிழ செய்கிறது;அழுதிடவே பிறந்தவர்போல் உழவரவர் அழுகின்றார்; எழுச்சியின்றி துயரெல்லாம் என்றும்என் இதயத்தில்! கல்விக்கோர் விலையென்று கலவிக்கோர் விலையென்றுபுல்லர்க்கோர் விலையென்று நல்லோர்க்கோர் விலையென்றுஎல்லோர்க்கும் விலைவைத்து எளியோரை வதைக்கின்றார்; எல்லாமே ஈரமாக என்றும்என் இதயத்தில்! மாறாத வடுவாகி மனிதமற்ற செயல்களாலே தீராத கொடுமையாகி தினந்தோறும் துடிப்பதாலே ஆராத புண்ணாகி அன்றாடம் ஏக்கமுண்டு;ஏறாத வாழ்வெண்ணி என்றும்என் இதயத்தில்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.