முதற்பத்து நான்காம் திருவாய்மொழி - 6

அவளுடைய ஆவி உலர்ந்துபோவதற்கு
Updated on
1 min read

அருளாத நீர் அருளி அவர் ஆவி துவராமுன்
அருள்ஆழிப் புள்கடவீர் அவர்வீதி ஒருநாள் என்று
அருள்ஆழி அம்மானைக் கண்டக்கால் இதுசொல்லி
அருள், ஆழி வரிவண்டே, யாமும் என்பிழைத்தோமே?

வட்டமான வரிகளைக்கொண்ட வண்டே,

நான் என்ன தவறுசெய்தேன்?

அருட்கடலான எம்பெருமானை நீ கண்டால், அவரிடம் இதைச்சொல், 'இதுவரை நீங்கள் அவளுக்கு அருள்செய்யவில்லை, இனிமேலாவது அருள் செய்யுங்கள், அவளுடைய ஆவி உலர்ந்துபோவதற்கு முன்னால் ஒரே ஒருநாளாவது அருட்கடலான கருடப்பறவையை அவளுடைய வீதியில் செலுத்துங்கள்' என்று சொல்லி அருள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com