முதற்பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 3

சிறந்த பிறப்புகளை உடையவர்கள்,
Updated on
1 min read

மாயோனிகளாய் நடைகற்ற வானோர் பலரும் முனிவரும்
நீயோனிகளைப் படை என்று நிறைநான்முகனைப் படைத்தவன்,
சேயோன் எல்லா அறிவுக்கும், திசைகள் எல்லாம் திருவடியால்
தாயோன், எல்லா எவ்உயிர்க்கும் தாயோன் தான்ஓர் உருவனே.

சிறந்த பிறப்புகளை உடையவர்கள், தங்களுடைய தொழிலை நன்கு அறிந்தவர்கள் வானோர்கள், அந்த வானோரையும் முனிவர்களையும் மற்ற உயிர்களையும் படைத்தவன் நான்முகப் பிரம்மன்,

ஆற்றல் நிறைந்த அந்தப் பிரம்மனைப் படைத்தவன் எம்பெருமான், பின்னர், 'எல்லா உயிர்களையும் நீ படைப்பாயாக' என்று அவனுக்குக் கட்டளையிட்டான்,

எம்பெருமான் யாருடைய அறிவுக்கும் அகப்படாதவன், திசைகளையெல்லாம் தன் திருவடியால் தாவி அளந்தவன், எல்லா உயிர்களுக்கும் தாயானவன்,

அப்படிப்பட்ட பெருமான், நற்குணங்களின் உருவமாயிருக்கிறானே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com