அடியேன், சிறிய ஞானத்தன் அறிதல் ஆர்க்கும் அரியானை,
கடிசேர் தண்அம் துழாய்க்கண்ணி புனைந்தான்தன்னை,
கண்ணனை,
செடிஆர் ஆக்கை அடியாரைச் சேர்த்தல் தீர்க்கும்
திருமாலை,
அடியேன் காண்பான் அலற்றுவன், இதனின் மிக்குஓர்
அயர்வுஉண்டே?
மிகுந்த அறிவுடையவர்களாலும் அறிய இயலாத அரியவன் எம்பெருமான், ஆனால் நானோ, என்னுடைய சிறிய அறிவை வைத்துக்கொண்டு அவனைக் காண முனைகிறேன், நறுமணம் நிறைந்த, குளிர்ச்சியான துளசிமாலை அணிந்தவன், கண்ணன், தன் அடியவர்கள் துன்பம்தரும் உடலை அடையாதபடி (பிறப்பு, இறப்புச்சுழலில் சிக்காதபடி) காத்து மோட்சம் தருகிற திருமால்... அத்தகைய பெருமானைக் காண வேண்டும் என்று சிற்றறிவுடைய நான் எண்ணலாமா? அவனை அழைத்துக் கூவலாமா? இதைவிடப் பெரிய முட்டாள்தனம் உண்டா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.