முதற்பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 2

தேன்வடியும் குளிர்ந்த, அழகிய துளசிமாலையை
Updated on
1 min read

மதுஆர் தண்அம் துழாயன்
முதுவேத முதல்வனுக்கு
எது,ஏது என்பணி என்னா
ததுவே ஆட்செய்யும் ஈடே.

தேன்வடியும் குளிர்ந்த, அழகிய துளசிமாலையை அணிந்தவன், பழைமையான வேதங்களால் புகழப்படும் முதல்வன் எம்பெருமான், 'அத்தகைய பெருமானுக்கு நான் செய்யக்கூடிய தொண்டு என்ன உள்ளது? நான் மிகவும் அற்பனாயிற்றே, எம்பெருமானுக்குத் தொண்டுசெய்யும் தகுதி எனக்கு உண்டா?' என்றெல்லாம் சிந்திக்காமல், உங்கள் தொண்டைச் செய்யத் தொடங்குங்கள், அதுவே அவனுக்குத் தொண்டு செய்வதற்கான தகுதி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com