முதற்பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 8

உலகத்தின் மீது வைத்திருக்கும் பற்றை
Updated on
1 min read

கழிமின் தொண்டீர்கள், கழித்துத்
தொழுமின், அவனைத் தொழுதால்
வழிநின்ற வல்வினை மாள்வித்து
அழிவுஇன்றி ஆக்கம் தருமே.

தொண்டர்களே, உலகத்தின் மீது வைத்திருக்கும் பற்றை நீக்குங்கள், எம்பெருமானைத் தொழுது வணங்குங்கள், அவ்வாறு நீங்கள் வணங்கும்போது, உங்களைத் தொடர்ந்து வருகிற வல்வினைகளையெல்லாம் அவன் நீக்குவான், அழிவற்ற செல்வத்தை(மோட்சத்தை)த் தருவான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com