முதற்பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 1

பிறவியாகிய துயரத்தை அறுத்து
Updated on
1 min read

பிறவித்துயர்அற ஞானத்துள் நின்று
துறவிச் சுடர்விளக்கம் தலைப்பெய்வார்,
அறவனை, ஆழிப்படை அந்தணனை
மறவியை இன்றி மனத்துவைப்பாரே.

பிறவியாகிய துயரத்தை அறுத்து, ஞானநெறியில் நின்று, உடலைத் துறந்து, ஞானவடிவமான ஆன்மாவை அனுபவிக்க விரும்புகிறவர்கள் என்ன செய்கிறார்கள்? அறத்தின் உருவானவனை, கையில் சக்ராயுதத்தை ஏந்திய அந்தணனை, எம்பெருமானை மறக்காமல் மனத்தில் வைக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com