முதற்பத்து முதல் திருவாய்மொழி - பாடல் 10

குளிர்ச்சியான கடலிலே உள்ள நீரணுக்கள்
Updated on
1 min read

பரந்த தண்பரவையுள் நீர்தொறும் பரந்துஉளன்,
பரந்த அண்டம் இதுஎன, நிலவிசும்பு ஒழிவுஅற
கரந்த சில் இடம்தொறும் இடம்திகழ் பொருள்தொறும்
கரந்து எங்கும் பரந்துஉளன் இவை உண்ட கரனே.

பரந்துவிரிந்த, குளிர்ச்சியான கடலிலே உள்ள நீரணுக்கள் ஒவ்வொன்றிலும் அவன் இருக்கிறான், அத்துனை சிறிய நீரணுவைப் பரந்த அண்டம்போல் அமைத்துக்கொண்டு அவனும் பரந்துவிரிந்திருக்கிறான்,

இவ்வாறு நிலத்திலும் விண்ணுலகிலும் மிக நுட்பமான இடங்களில்கூட அவன் உள்ளான், அவற்றிலுள்ள அனைத்துப் பொருள்களிலும் அவனே பரந்துவிரிந்திருக்கிறான், அதைப் பிறரால் காண இயலாது,

அவன் யார் எனில், எம்பெருமான், இவை அனைத்தையும் (உலகை) உண்ட பெருமான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com